என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 4 நாளில் 2.42 அடி சரிவு
    X

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 4 நாளில் 2.42 அடி சரிவு

    • அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 10,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
    • பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட நீர்வரத்து குறைவாக இருப்பதால், நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில், தொடர்ந்து இன்று நீர்வரத்து விநாடிக்கு 1000 கன அடியாக நீடித்தது. அதே சமயம் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 522 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 406 கனஅடியாக குறைந்துள்ளது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 10,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட நீர்வரத்து குறைவாக இருப்பதால், நீர்மட்டம் சரிந்து வருகிறது. கடந்த 12-ந்தேதி 103.35 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று 100.93 அடியாக சரிந்துள்ளது. இதன் மூலம் 4 தினங்களில் 2.42 அடி வரை நீர்மட்டம் குறைந்துள்ளது.

    Next Story
    ×