என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,547 கனஅடியாக அதிகரிப்பு
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,547 கனஅடியாக அதிகரிப்பு

    • மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1,570 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 1,327 கனஅடியாக சரிந்தது.
    • இன்று காலை நீர்வரத்து சற்று அதிகரித்து விநாடிக்கு 1,547 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும், ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்து வருகிறது.

    ஒகேனக்கல் காவிரியில், நேற்று 3 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்றும் அதே அளவில் நீடிக்கிறது.

    இதே போல்,மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1,570 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 1,327 கனஅடியாக சரிந்தது. இந்நிலையில் இன்று காலை நீர்வரத்து சற்று அதிகரித்து விநாடிக்கு 1,547 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12,000 கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 400 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக, நேற்று 113.54 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 112.89 அடியாக சரிந்தது.

    Next Story
    ×