search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விமானம் தாமதமாக வந்ததால் மும்பை செல்லும் விமானத்தை தவறவிட்ட மத்திய மந்திரி
    X

    விமானம் தாமதமாக வந்ததால் மும்பை செல்லும் விமானத்தை தவறவிட்ட மத்திய மந்திரி

    • மத்திய மந்திரி கபில் மொரிஸ்வர் உள்நாட்டு விமானநிலையத்தில் சுமார் 2 மணி நேரம் காத்திருத்தார்.
    • சென்னையிலிருந்து மும்பைக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.

    ஆலந்தூர்:

    மத்திய இணை மந்திரி கபில் மோரேஷ்வர் பாட்டீல், நேற்று இரவு மதுரையில் இருந்து இரவு 7 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னைக்கு வந்துவிட்டு, இரவு 8.30 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னையிலிருந்து மும்பைக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.

    ஆனால் மதுரையிலிருந்து இரவு 7 மணிக்கு வர வேண்டிய விமானம் தாமதமாக இரவு 8.15 மணிக்கு தான் சென்னை வந்தது. உடனடியாக அவரை சென்னை விமான நிலைய பாதுகாப்பு கிளை போலீசார் அவசரமாக மும்பை செல்ல இருக்கும், விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்றி வைக்க அழைத்து சென்றனர்.ஆனால் விஸ்தாரா ஏர்லைன்ஸ் அதிகாரிகள் போா்டிங் முடிந்து விட்டது. நீங்கள் தாமதமாக வந்துவிட்டீர்கள் என்று மந்திரியின் டிக்கெட் முன்பதிவை ரத்து செய்தனா்.

    இதையடுத்து மத்திய மந்திரி கபில் மொரிஸ்வர் உள்நாட்டு விமானநிலையத்தில் சுமார் 2 மணி நேரம் காத்திருத்தார்.

    அதன்பின்பு இரவு 10.30 மணிக்கு மும்பை செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் அவர் புறப்பட்டு சென்றாா்.

    மதுரையில் இருந்து வந்த விமானம் தாமதம் காரணமாக, மத்திய மந்திரி மும்பை செல்ல முடியாமல், 2 மணி நேரம் சென்னை விமானநிலையத்தில் தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    Next Story
    ×