search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசு விளம்பரங்களில் கருணாநிதி படத்திற்கு தடை கோரிய வழக்கு- விசாரணை தள்ளிவைப்பு
    X

    அரசு விளம்பரங்களில் கருணாநிதி படத்திற்கு தடை கோரிய வழக்கு- விசாரணை தள்ளிவைப்பு

    • தமிழகத்தில் அரசு விளம்பரங்கள், இணையதளங்களில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் புகைப்படம் பயன்படுத்தப்படுகிறது.
    • மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரின் புகைப்படத்தை அரசு விளம்பரங்கள், இணையதளங்களில் பயன்படுத்துவது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும், அரசியல் சாசனத்தையும் மீறிய செயல் ஆகும்.

    சென்னை:

    மதுரையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், 'கட் அவுட் கலாச்சாரத்தை நீதிமன்றம் தலையிட்டு தடுத்திருக்கும் நிலையில் தற்போது புகைப்பட கலாச்சாரம் பரவி வருகிறது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, அரசு விளம்பரங்களில் குடியரசு தலைவர், பிரதமர், முதல்-அமைச்சர்கள், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்களை மட்டுமே பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது.

    ஆனால், தமிழகத்தில் அரசு விளம்பரங்கள், இணையதளங்களில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் புகைப்படம் பயன்படுத்தப்படுகிறது.

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரின் புகைப்படத்தை அரசு விளம்பரங்கள், இணையதளங்களில் பயன்படுத்துவது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும், அரசியல் சாசனத்தையும் மீறிய செயல் ஆகும்.

    இதுபோன்று மறைந்த தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்துவது வரலாற்றை திரிப்பதுடன், மற்ற முதல்-அமைச்சர்கள் பங்களிப்பை மறைமுகமாக குறைத்து மதிப்பிட வழிவகுத்து விடும் என்பதால், அரசு இணையதளங்களில் கருணாநிதி புகைப்படங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.

    முன்னாள் முதல்-அமைச்சர்கள் மற்றும் சட்டப்படி அனுமதிக்கப்படாத தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தக் கூடாது என அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் தமிழில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

    Next Story
    ×