search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொடிவேரி தடுப்பணையில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீர்- சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை
    X

    கொடிவேரி தடுப்பணையில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீர்- சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை

    • கொடிவேரி தடுப்பணைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து செல்கிறார்கள்.
    • தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு உள்ளது.

    கோபி:

    ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த நாட்களாக பரவலாக இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டி வருகிறது.

    இதே போல் போல் நேற்று இரவும் கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், நம்பியூர், கொடிவேரி மற்றும் பவானிசாகர் நீர் பிடிப்பு பகுதிகளிலும் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடிவேரி பகுதியில் 7 செ.மீட்டர் மழை கொட்டியது.

    இதனால் பவானி ஆற்றில் மழை வெள்ளம் இருகரைகளையும் தொட்டப்படி பெருக்கெடுத்து செல்கிறது. மேலும் கொடிவேரி தடுப்பணையிலும் அதிகப்படியான தண்ணீர் செல்கிறது.

    பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பவானி ஆற்றில் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை வழியாக கொட்டி ஆர்ப்பரித்து செல்கிறது.

    கொடிவேரி தடுப்பணைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து செல்கிறார்கள்.

    மேலும் விடுமுறை மற்றும் விழா நாட்களில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதாலும் உபரி நீர் அதிகளவில் செல்வதாலும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் கொடிவேரி தடுப்பணையில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் மீண்டும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதே போல் தொடர் மழை காரணமாக பவானி ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது எனவும் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். இதனால் தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு உள்ளது. இன்று கொடிவேரிக்கு பொதுமக்கள் ஒரு சிலர் மட்டுமே வந்திருந்தனர். உள்ளே செல்லும் கதவு அடைக்கப்பட்டு இருந்ததால் அவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    Next Story
    ×