search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கல்பாக்கம் அருகே வெங்கம்பாக்கம் இ.சி.ஆரில் நிழல்குடை இல்லாமல் பயணிகள் அவதி
    X

    கல்பாக்கம் அருகே வெங்கம்பாக்கம் இ.சி.ஆரில் நிழல்குடை இல்லாமல் பயணிகள் அவதி

    • பயணிகள் நிழல்குடை இல்லாததால் சாலையோரம் நின்றே பஸ்களை கைகாட்டி நிறுத்தி ஏறுகின்றனர்.
    • வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அருகே உள்ள வெங்கம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை பஸ் நிறுத்தத்தில் நிழல்குடை இல்லாமல் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை, திருவான்மியூர், பாண்டிச்சேரி, மதுராந்தகம், கூவத்தூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு வேலைக்கு வந்து செல்லும் ஒப்பந்த ஊழியர்களின் முக்கியமான பஸ் நிறுத்தம் இது.

    பயணிகள் நிழல்குடை இல்லாததால் சாலையோரம் நின்றே பஸ்களை கைகாட்டி நிறுத்தி ஏறுகின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றர். பயணிகளின் பாதுகாப்பு கருதி நெடுஞ்சாலை துறையினர் அப்பகுதியில் நிழல்குடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், பஸ் பயணிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×