search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் 3 நாட்களாக நடந்த வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின
    X

    தமிழகத்தில் 3 நாட்களாக நடந்த வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின

    • சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள்.
    • கூடுதல் விவரங்களை வருமான வரித்துறையினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலையொட்டி பறக்கும் படை அதிகாரிகள் பணப்பட்டுவாடாவை தடுக்க 24 மணி நேரமும் தீவிர சோதனை நடத்தி வரும் நிலையில் வருமான வரித்துறையினரும் தொடர்ச்சியாக சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் சென்னையில் கடந்த 5-ந்தேதி அன்று தொடங்கிய வருமான வரி சோதனை மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த சோதனை நேற்று இரவுடன் முடிவடைந்துள்ளது.

    அரசியல் பிரமுகர்கள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோர்களின் வீடுகளில் நடைபெற்ற இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக கட்டு கட்டாக கோடிக்கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரிலேயே வருமானவரித்துறையினர் இந்த சோதனையை நடத்தி இருந்தனர்.

    ஆனால் இந்த சோதனையின் போது பணம் ஏதும் கைப்பற்றப்பட்டுள்ளதா என்பது பற்றிய விவரங்களை இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக கூடுதல் விவரங்களை வருமான வரித்துறையினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×