என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கடுக்கரை ஊராட்சியில் சுகாதாரத் திருவிழா மருத்துவ முகாம்- விஜய்வசந்த் எம்.பி தொடங்கி வைத்தார்
- டெங்கு, புகையிலை, தொழுநோய், காசநோய், ஊட்டச்சத்து போன்ற விழிப்புணர்வு கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.
- முகாம் ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் ஏற்பாடு செய்திருந்தனர்.
கடுக்கரை ஊராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துதுறை சார்பில் மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் நிதியிலிருந்து சுகாதாரத் திருவிழா மருத்துவ முகாமை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம். பி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, நரம்பியல் மருத்துவம், சிறுநீரக மருத்துவம், பல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, மனநலம் சிகிச்சை, கண் மருத்துவம், புகையிலை சம்பந்தமான சிகிச்சைகள், தொழுநோய், காசநோய், சித்த மருத்துவம், ஹோமியோபதி சம்பந்தமான சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டார்கள் .
டெங்கு, புகையிலை, தொழுநோய், காசநோய், ஊட்டச்சத்து போன்ற விழிப்புணர்வு கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. முகாம் ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் மாநில செயலாளர் வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன், காங்கிரஸ் வட்டார தலைவர் செல்வராஜ், கிழக்கு மாவட்ட திமுக துணைச்செயலாளர் பூதலிங்கம் காங்கிரஸ் நிர்வாகிகள் சீலன், ஹென்றி, ராபி உட்பட பேரூராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.






