search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுமாப்பிள்ளை திடீர் தற்கொலை- போலீசார் விசாரணை
    X

    நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுமாப்பிள்ளை திடீர் தற்கொலை- போலீசார் விசாரணை

    • திருமணத்துக்காக இருவீட்டு பெற்றோரும் உறவினர்கள், நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்தனர்.
    • நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த ஆலம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி சரசு. இவர்களது மகன் கேசவமூர்த்தி (28). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஊழியராக வேலைப்பார்த்து வந்தார். அப்போது அதே பள்ளியில் ஊழியராக வேலைப்பார்க்கும் பெண்ணுக்கும், கேசவ மூர்த்திக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதுப்பற்றி தெரியவந்ததும் இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி ஈரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சியும், நாளை (22-ந்தேதி) காலை திருமணம் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மேலும் திருமணத்துக்காக இருவீட்டு பெற்றோரும் உறவினர்கள், நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்த கேசவமூர்த்தி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பக்கத்து வீட்டு சிறுவன் வந்து பார்த்த போது தான் கேசவமூர்த்தி பிணமாக தொங்குவது தெரியவந்தது. பின்னர் இதுப்பற்றி தெரியவந்தும் உறவினர்கள் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் ஓடிவந்து கேசவமூர்த்தியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    பின்னர் இதுப்பற்றி தெரியவந்ததும் வெள்ளி திருப்பூர்போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கேசவ மூர்த்தியின் உடலை கைப்பற்றி அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கடந்த ஒருவாரமாகவே கேசவ மூர்த்தி தொடர்ந்து காதலியிடம் செல்போனில் பேசி வந்து உள்ளார்.

    இந்த நிலையில் தான்அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். எனவே போனில் பேசும் போது அவர்களுக்கு இடையே ஏதாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக மனம் உடைந்து கேவச மூர்த்தி தற்கொலை செய்து கொண்டுஇருக்கலாம் என்று தெரியவந்தது. மேலும் இது குறித்து அவரது காதலியிடமும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். இது குறித்து வெள்ளிதிருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×