search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள்... கவர்னர் ஆர்.என்.ரவி புகழாரம்
    X

    சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள்... கவர்னர் ஆர்.என்.ரவி புகழாரம்

    • சுவாமி விவேகானந்தர் உலக நன்மைக்காக பாரதத்தை அதன் இலக்கை நோக்கி தொடர்ந்து வழிநடத்துவார்.
    • காலனித்துவ மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குள் உண்மையான பெருமிதத்தையும் தேசிய விழிப்புணர்வையும் ஏற்படுத்திய பாரதத் தாயின் மகனுக்கு எனது பணிவான மரியாதைகள்.

    சென்னை :

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    "இந்திய தேசியவாதத்தின் உச்சபட்ச அடையாளமாகவும், இளைஞர்களுக்கு தேசத்தை கட்டியெழுப்புவதற்கான மிகப்பெரிய உத்வேகமாகவும் விளங்கும் சுவாமி விவேகானந்தர், உலக நன்மைக்காக பாரதத்தை அதன் இலக்கை நோக்கி தொடர்ந்து வழிநடத்துவார்.

    அவருடனான தொடர்பை எந்தளவுக்கு அதிகமாக கொள்கிறீர்களோ அந்தளவுக்கு, சுயத்துக்கும் சமூகத்துக்கும் செய்ய வேண்டிய பணிகள் மூலம் தேசத்துக்கான கடமைகளை ஆற்றுவதில் நீங்கள் அதிக உற்சாகம் பெறுவீர்கள்.

    காலனித்துவ மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குள் உண்மையான பெருமிதத்தையும் தேசிய விழிப்புணர்வையும் ஏற்படுத்திய பாரதத் தாயின் மகனுக்கு எனது பணிவான மரியாதைகள்" என கூறியுள்ளார்.

    Next Story
    ×