search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் 15 அரசு பள்ளிகளில் மீண்டும் வெள்ளம் சூழ்ந்தது
    X

    சென்னையில் 15 அரசு பள்ளிகளில் மீண்டும் வெள்ளம் சூழ்ந்தது

    • சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து சனி, ஞாயிறு தொடர் விடுமுறையும் மாணவர்களுக்கு கிடைத்துள்ளது.
    • 3 நாட்களில் மழை நீர் தேங்கிய பள்ளிகளை சீரமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் ஒரு இடங்களில் மழை நீர் தேங்கியது. அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் அகற்றி வருகின்றனர்.

    அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி வளாகம் மற்றும் மைதானத்திலும் மழை நீர் தேங்கி நின்றது. குளம் போல தேங்கி நின்ற மழை நீரால் 5 பள்ளிகளில் நேற்று முழுமையாக வகுப்புகள் நடைபெறவில்லை. மாணவர் பாதுகாப்பு கருதி ஒரு சில பள்ளிகளுக்கு விடுமுறையும் விடப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையால் 15-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் மழை நீர் தேங்கியது. அங்கு மின் மோட்டார் மூலம் மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காத வகையில் வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் அறிவுறுத்தி உள்ளார்.

    அதைத் தொடர்ந்து சென்னையில் அனைத்து பள்ளி கட்டிடங்கள், கழிவறை, வகுப்பறை போன்றவற்றை ஆய்வு செய்கின்றனர். மின் கசிவு ஏற்பட்டு உள்ளதா? எனவும் பரிசோதனை செய்கின்றனர்.

    சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து சனி, ஞாயிறு தொடர் விடுமுறையும் மாணவர்களுக்கு கிடைத்துள்ளது. இந்த 3 நாட்களில் மழை நீர் தேங்கிய பள்ளிகளை சீரமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×