என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கடைகளில் 6 ரூபாய்க்கு விற்பனை- வரலாறு காணாத அளவு முட்டை விலை உயர்வு
- பண்ணை கொள்முதல் விலையாக ஒரு முட்டை 535 காசுகள் என இருந்த நிலையில் நேற்று மேலும் 15 காசுகள் உயர்ந்து 550 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.
- இதனால் சில்லரை விற்பனை கடைகளில் 6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் தினமும் 5 கோடிக்கும் அதிகமாக முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
முட்டை நுகர்வை பொருத்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு என்ற தனியார் அமைப்பு முட்டை கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கிறது. இதன்படி நாமக்கல் மண்டலத்தில் (சென்னை தவிர தமிழகம் முழுவதும்) பண்ணை கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்படுகிறது.
பண்ணை கொள்முதல் விலையாக ஒரு முட்டை 535 காசுகள் என இருந்த நிலையில் நேற்று மேலும் 15 காசுகள் உயர்ந்து 550 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் சில்லரை விற்பனை கடைகளில் 6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயம் நாமக்கல் முட்டை விலை வரலாற்றில் உச்சபட்ச விலை என்பதால் கோழிப்பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதே வேளையில் சில்லறை விற்பனை விலையில் ஒரு முட்டை ரூ.6 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில இடங்களில் ரூ. 6-க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. இது முட்டை விலை உயர்வு நுகர்வோரை அதிருப்தி அடைய செய்துள்ளது.
இதனிடையே கோழி தீவனம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இதை சமாளிக்கவோ முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு முட்டை கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:-
கடந்த ஓராண்டாக கோழிப்பண்ணையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. ஒரு முட்டை உற்பத்திக்கான செலவு 400 காசுகளில் இருந்து 450 காசுகளாக அதிகரித்துள்ளது. தற்போது 550 காசாக நிர்ணயம் செய்யப்பட்டாலும் 515 காசு மட்டுமே கையில் கிடைக்கிறது.
எனவே கோழிப்பண்ணைகளில் கோழிக்குஞ்சு விடுவது தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் முட்டை உற்பத்தி குறைந்துள்ளது. இதன் மூலம் நாள் தோறும் 5 கோடி முட்டை உற்பத்தி செய்து வந்த நிலையில் தற்போது 4.20 கோடி முட்டைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆண்டுதோறும் முட்டை உற்பத்தி 10 சதவீதம் உயரும் நிலையில் தற்போது 20 சதவீதம் குறைந்துள்ளது. உற்பத்தி குறைவு காரணமாக முட்டை கொள்முதல் விலை 600 காசுகள் வரை உயர வாய்ப்பு உள்ளது என்றார். பண்ணை கொள்முதல் விலை 600 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டால் சில்லறை விற்பனை கடைகளில் விலை மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முட்டை கொள்முதல் விலை கடந்த 1-ந்தேதி (பைசாவில்) 480காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து 6-ம் தேதி 485 காசாகவும், 9-ந் தேதி 490 காசு, 11-ந்தேதி 495 காசு, 13-ந்தேதி 505 காசு, 16-ந் தேதி 510 காசு, 23-ந் தேதி 520 காசு, 25-ந் தேதி 535 காசு என ஏற்றம் கண்டு வந்த முட்டை விலை நேற்று மேலும் ஏற்றம் கண்டு 15 காசு அதிகரித்து 550 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்