search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

    • 3 இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனையில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக முக்கிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    • அமலாக்கத்துறை அதிகாரிகள் அடுத்த கட்ட விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் முபாரக் உசேன் என்பவரது வீட்டில் இன்று காலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சில ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதே போன்று நுங்கம்பாக்கம் குமாரமங்கலம் சாலையில் உள்ள ஐ.டி. ஊழியர் தர்சன்குமார் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். குமரன்நகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் ஆடிட்டர் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த 3 இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனையில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக முக்கிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அடுத்த கட்ட விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இதன் முடிவில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×