என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் இருபிரிவாக வாக்குவாதம்- அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு
- தி.மு.க.வில் ஒரு தரப்பினர் அனுமதி கொடுக்க வேண்டும் என்றும் மற்றொரு தரப்பினர் அனுமதி அளிக்க கூடாது என்றும் கூறி மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும் கூறி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சங்கர் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
தாம்பரம்:
தாம்பரம் மாநகராட்சி கூட்டம் இன்று காலை மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் காமராஜ், ஆணையர் அழகுமீனா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ரியல் எஸ்டேட் தொடர்பான அனுமதி கேட்டு மன்ற பொருள் வைக்கப்பட்டிருந்தது.
இதற்கு தி.மு.க.வில் ஒரு தரப்பினர் அனுமதி கொடுக்க வேண்டும் என்றும் மற்றொரு தரப்பினர் அனுமதி அளிக்க கூடாது என்றும் கூறி மாறி மாறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை பார்த்த அ.தி.மு.க.கவுன் சிலர்கள் 9 பேர் மற்றும் ஒரு சுயேட்சை வேட்பாளர் ஆகியோர் மக்களின் குறைகள் எதுவும் பேசாமல் ரியல் எஸ்டேட்டுக்காக தி.மு.க. உறுப்பினர்கள் மன்றத்தை நடத்த விடாமல் செய்வதாகவும், மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும் கூறி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சங்கர் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
Next Story






