search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
    X

    திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

    • கோவில் வளாகம் திருவிழா காலம் போல் காட்சியளித்தது.
    • பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

    திருச்செந்தூர்:

    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலானது சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது.

    மேலும் கடற்கரை அருகில் அமைந்திருப்பதால், திருவிழா காலங்கள் மட்டுமல்லாது நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    மேலும் அரசியல் கட்சி பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் சுவாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வருவதால் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், 6 மணிக்கு உதய மார்தாண்ட அபிஷேகம் மேலும் மற்ற கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்றது.

    தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை தினம் என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இதனால் கோவில் வளாகம் திருவிழா காலம் போல் காட்சியளித்தது. பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

    அதிகாலை முதலே கோவிலில் குவிந்த பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி பொது தரிசனத்தில் சுமார் 6 மணி நேரமும், ரூ.100 கட்டண தரிசனத்தில் சுமார் 5மணி நேரமும் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் குவிந்ததால் திருச்செந்தூர் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    Next Story
    ×