என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு
    X

    திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

    • திருச்சி மாவட்டத்தில் அக்டோபர் மாதத்தில் இதுவரை 86 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • இந்த வருடத்தில் மட்டும் 463 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருச்சி:

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. அதைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 8 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 3பேரும், கிராமப்புற பகுதியைச் சேர்ந்த 5 பேரும் உள்ளனர்.

    திருச்சி மாவட்டத்தில் அக்டோபர் மாதத்தில் இதுவரை 86 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வருடத்தில் மட்டும் 463 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×