என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மாமல்லபுரம் கடற்கரையில் ஆபத்தை உணராமல் குளிக்கும் சுற்றுலா பயணிகள்- கலெக்டர் எச்சரிக்கை
- விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
- கடலில் மூழ்கி இறப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்குள்ள புராதன சின்னங்களை பார்வையிட தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் மாமல்லபுரம் சுற்றுலாவருபவர்கள் மாமல்லபுரம், கல்பாக்கம், உய்யாலிகுப்பம், புதுப்பட்டினம் கடற்கரை பகுதிக்கு சென்று அங்குள்ள கடற்கரையில் பொழுதை கழிப்பது வழக்கம். அப்போது பலர் ஆபத்தை உணராமல் கடலில் இறங்கி குளித்து வருகிறார்கள். இதனால் கடலில் மூழ்கி இறப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.
இந்த கடற்கரை பகுதி மணல் திட்டு நிறைந்த ஆழமான பகுதியாகும். கடலில் இறங்கினால் மேடாக இருக்கும் மணல் திட்டானது, திடீரென ஆழமாகும். இதனால் கடலில் மூழ்கி பலர் உயிர் இழப்புக்கும் சம்பவங்கள் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதற்கிடையே மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வேண்டாம் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்த எச்சரிக்கை விடுத்து உள்ளார். இதுதொடர்பாக கடற்கரையோரத்தில் எச்சரிக்கை பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்