search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை புத்தகக் காட்சி இன்று நடைபெறாது
    X

    சென்னை புத்தகக் காட்சி இன்று நடைபெறாது

    • விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையில் புத்தகக் காட்சி நடைபெறும்.
    • புத்தகக் காட்சியில் சுமார் 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் 47-வது புத்தகக் காட்சி கடந்த 3-ந்தேதி தொடங்கியது. புத்தகக் காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    வருகிற 21-ந்தேதி வரை நடைபெற உள்ள புத்தகக் காட்சி வேலை நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடைபெறும். புத்தகக் காட்சியில் சுமார் 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னை புத்தகக் காட்சிக்கு இன்று ஒருநாள் மட்டும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பொதுமக்கள் வந்து செல்வதில் ஏற்படும் சிரமங்களுக்காக இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் நாளை வழக்கம்போல் புத்தகக் காட்சி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×