search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இந்து அமைப்பு நிர்வாகியின் கார் உடைப்பு- 4 பேரூக்கு வலைவீச்சு
    X

    வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இந்து அமைப்பு நிர்வாகியின் கார் உடைப்பு- 4 பேரூக்கு வலைவீச்சு

    • மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை கற்களால் சரமாரியாக தாக்கி உடைத்தனர்.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    பார்வதிபுரம் அருகே களியங்காடு சிவன் கோவில் பின்புறம் வசித்து வருபவர் ஈசானிய சிவம் என்ற ராஜா. இவர் இந்து தமிழர் கட்சியின் குமரி மாவட்ட பார்வையாளராக உள்ளார்.

    நேற்று இரவு ஈசானிய சிவம் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு இரவு வீட்டிற்கு வந்தார். வீட்டில் முன் பகுதியில் தனது காரை நிறுத்தி இருந்தார். இன்று அதிகாலையில் நாகர்கோவில் பகுதியில் உள்ள கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஈசானிய சிவம் தயாராகி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை கற்களால் சரமாரியாக தாக்கி உடைத்தனர். வீட்டின் மீதும் கற்களை வீசினார்கள். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது. இது குறித்து ஈசானிய சிவம் இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சி.சி.டி.வி. கேமராவில் காரை உடைத்த வாலிபர்களின் முகம் தெளிவாக பதிவாகி யுள்ளது.

    இதையடுத்து அவர்கள் யார் என்ற விவரத்தை போலீசார் சேகரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து இரணியல் போலீசில் ஈசானிய சிவம் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×