என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பத்துகாணி பகுதியில் புலியை பிடிக்க 3 இடங்களில் கூண்டு
- புலி நடமாட்டத்தை கண்காணிக்க 4 இடங்களில் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.
- கூண்டு அமைத்தும் புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருவட்டார்:
பேச்சிப்பாறை, சிற்றாறு சிலோன் காலனியில் குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்டு இருந்த ஆடுகளை புலி கடித்துக் குதறியது. அடுத்தடுத்து ஆடு, மாடுகளை கடித்துக் கொன்றதால் அந்த பகுதியில் உள்ள பழங்குடி மக்கள் அச்சம் அடைந்தனர்.
புலியை பிடிக்க 2 கூண்டுகள் அமைக்கப்பட்டது. மேலும் எலைட் படையினரும், டாக்டர் குழுவினரும், வனத்துறையினரும் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். டிரோன் கேமரா மூலமாகவும் கண்காணிக்கப்பட்டது. ஆனால் புலி சிக்கவில்லை. இதையடுத்து தேடுதல் வேட்டை கைவிடப்பட்டது.
எலைட் படையினரும் டாக்டர் குழுவினரும் தேடுதல் வேட்டையை கைவிட்டனர். இந்த நிலையில் பத்துகாணி ஒரு நூறாம்வயல் குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்டிருந்த 4 ஆடுகளை புலி கடித்து குதறியது. இது குறித்து குமரி மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வன அதிகாரி இளையராஜா தலைமையில் வனக்குழுவினர் பத்துகாணி பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆடுகளை இழந்த பழங்குடியினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. கடந்த 16 நாட்களாக புலி தொந்தரவு இல்லாமல் இருந்த நிலையில் மீண்டும் அட்டகாசத்தை தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
புலியை பிடிக்க முதுமலை காப்பகத்தில் இருந்து பயிற்சி பெற்ற பழங்குடியினரும், எலைட் படையினரும், டாக்டர் குழுவினரும் மீண்டும் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. குமரி மாவட்ட வன அதிகாரிகளும் இவர்களுடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் புலியை தேடும் பணியில் இறங்கி உள்ளார்கள். ஏற்கனவே சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் 2 கூண்டுகள் அமைக்கப்பட்ட நிலையில் பத்துகாணி பகுதியில் மேலும் 3 கூண்டுகளை அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதற்காக நெல்லை மற்றும் களக்காட்டில் இருந்து கூண்டுகள் வரவழைக்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் பத்துகாணி பகுதியில் கூண்டுகள் அமைக்கடுகிறது.
மேலும் புலி நடமாட்டத்தை கண்காணிக்க 4 இடங்களில் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வன அதிகாரி இளையராஜா கூறுகையில், சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தியதை தொடர்ந்து அந்த பகுதியில் கடந்த சில நாட்களாக புலி நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இதனால் தேடுதல் வேட்டையை கைவிட்டு இருந்தோம்.
இந்த நிலையில் பத்துகாணி பகுதியில் ஆடுகளை கடித்து கொன்றுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் தற்போது தேடுதல் வேட்டையை மேற்கொண்டுள்ளோம். கூண்டு அமைத்தும் புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. விரைவில் புலி பிடிபடும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்