search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாயிடம் பால் குடித்த கன்றுக்குட்டி
    X

    நாயிடம் பால் குடித்த கன்றுக்குட்டி

    • நாயும் கன்று குட்டி பால் குடிக்கும் வரை அமைதியாக இருந்தது.
    • நாயிடம் கன்றுக்குட்டி பால் குடிக்கும் காட்சியை அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் அதிசயத்துடன் பார்த்தனர்.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் சித்தூர்கேட் பாஷா நகரில் வசிப்பவர் அஸ்கர் மாடு வியாபாரம் செய்து வருகிறார். இவரது வீட்டில் கன்றுக்குட்டி ஒன்று வளர்ந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று கன்றுக்குட்டி வீட்டிற்கு வெளியே இருந்துள்ளது. அப்போது அங்கே நாய் தனது குட்டிகளுக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்தது.அதனை கண்ட கன்றுக்குட்டியும் அந்த நாயிடம் சென்று பால் குடித்தது.

    அந்த நாயும் கன்று குட்டி பால் குடிக்கும் வரை அமைதியாக இருந்தது நாயிடம் கன்றுக்குட்டி பால் குடிக்கும் காட்சியை அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் அதிசயத்துடன் பார்த்தனர்.

    Next Story
    ×