search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தீபாவளிக்கு கடன் வாங்கும் நிலை- போக்குவரத்து கழக தொழிலாளர்கள் குமுறல்
    X

    தீபாவளிக்கு கடன் வாங்கும் நிலை- போக்குவரத்து கழக தொழிலாளர்கள் குமுறல்

    • நாடு முழுவதும் நாளை தீபாவளி கொண்டாடப்படுகிறது.
    • போக்குவரத்து கழக தொழிலாளர்களின் தீபாவளி போனஸில் அனுமதியின்றி பிடித்தம்.

    தீபாவளிக்கு அரசு ஊழியர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள், போக்குவரத்து கழக தொழிலாளர்கள், டாஸ்மாக் ஊழியர்கள் உள்ளிட்டோர்களுக்கு தமிழக அரசு போனஸ் அறிவித்துள்ளது.

    நாடு முழுவதும் நாளை தீபாவளி கொண்டாடப்படுகிறது.


    இந்நிலையில் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் தீபாவளி போனஸில் அனுமதியின்றி பிடித்தம் செய்யப்படுவதால் தொழிலாளர்கள் பண்டிகைக்காக கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    அதனால் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் தீபாவளி போனஸில் அனுமதியின்றி பிடித்தம் செய்ய தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வாதங்களை கேட்ட உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக தமிழக அரசு, போக்குவரத்து கழகங்கள் 2 வாரங்களில் பதிலளிக்க அளிக்க உத்தரவிட்டது.

    Next Story
    ×