search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பி.இ. கலந்தாய்வு சிறப்பு பிரிவு- அரசு பள்ளியில் படித்த 59 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு
    X

    பி.இ. கலந்தாய்வு சிறப்பு பிரிவு- அரசு பள்ளியில் படித்த 59 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு

    • முதலில் அரசு பள்ளியில் படித்த சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகளுக்கு கவுன்சிலிங் தொடங்கியது.
    • அரசு பள்ளியில் படித்த மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் கலந்தாய்வு நடந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு, உதவிபெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 56 இடங்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு நேற்று தொடங்கியது.

    முதலில் அரசு பள்ளியில் படித்த சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகளுக்கு கவுன்சிலிங் தொடங்கியது. அரசு பள்ளியில் படித்த மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் கலந்தாய்வு நடந்தது.

    110 மையங்களில் ஆன்லைன் வழியாக நடந்த கலந்தாய்வில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் சிறந்த கல்லூரிகளில் விருப்பப்பாடப் பிரிவுகளை தேர்வு செய்தனர். இரவு அவர்களுக்கு உத்தேச ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த இடங்கள் உறுதி செய்யப்பட்டன.

    மாற்றுத்திறனாளிகள் 21 பேரும், முன்னாள் ராணுவத்தின் குடும்பத்தினர் 2 பேரும், விளையாட்டு பிரிவில் 36 பேருக்கும் தேர்வு செய்த கல்லூரிகள் இன்று ஒதுக்கப்பட்டன.

    பிற்பகலில் அவர்களுக்கு ஒதுக்கீட்டு கடிதம் வழங்கப்படும். அதனை தொடர்ந்து மாலை 7 மணிக்கு பொது சிறப்பு பிரிவு கலந்தாய்வு தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் கல்லூரிகளை தேர்வு செய்கிறார்கள். நாளை மாலை 7 மணி வரை வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. 23-ந்தேதி காலையில் உத்தேச ஒதுக்கீட்டு இடங்கள் வழங்கப்படும். 24-ந்தேதி காலையில் கல்லூரியில் சேர்வதற்கான ஒதுக்கீட்டு கடிதம் வழங்கப்படும். அதனை தொடர்ந்து 25-ந்தேதி முதல் பொதுப்பிரிவு கலந்தாய்வு 4 சுற்றுகளாக நடக்கிறது.

    Next Story
    ×