என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அ.தி.மு.க. உள்கட்சி பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
    X

    அ.தி.மு.க. உள்கட்சி பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

    • திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
    • பள்ளிப்பட்டு கரிம்பேடு நாதாதீஸ்வர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார்.

    திருத்தணி:

    திருத்தணி தொகுதியில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து வருகிறார்.

    இன்று காலை அவர் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் மேட்டுத்தெரு பகுதியில் உள்ள எல்லை போராட்ட தியாகி தளபதி.கே.வினாயகம் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் பள்ளிப்பட்டு கரிம்பேடு நாதாதீஸ்வர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள கிராமங்களில் கட்சி கொடி ஏற்றி வைத்தார். அப்போது அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்களை சந்திக்கும் 2.0 திட்டத்தை பள்ளிப்பட்டு கரிம்பேட்டில் இருந்து தொடங்கி உள்ளேன். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க முயற்சி செய்ய உள்ளேன்.

    தமிழகத்தை தி.மு.க, அ.தி.மு.க. என மாறி மாறி ஆட்சி செய்தும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வில்லை. பள்ளிப்பட்டு பகுதியில் முக்கிய தொழிலாக நெசவுத்தொழில் உள்ளது. இப்பகுதியில் ஜவுளி பூங்கா அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும. நெசவு தொழில்களை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்ய வேண்டும்.

    அ.தி.மு.க. தமிழகத்தில் பலம்வாய்ந்த கட்சி. இப்போது அ.தி.மு.க.வில் நடைபெறும் உட்கட்சி பிரச்சினையை அவர்கள் பேசி தீர்த்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது பா.ம.க. மாநில துணைத் தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் மாநில துணை செயலாளர் பாலா என்கிற பாலயோகி, திருவள்ளூர் மாவட்ட செயலாளர் தினேஷ்குமார், மாவட்ட துணை செயலாளர் வெங்கடேசன், அரக்கோணம் சரவணன், செல்வம், கார்த்திக், வினாயகம், விஜயன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×