என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை 7 சதவீதம் அதிகரிப்பு
- சென்னையில் பால் வினியோகம் கொரோனா பாதிப்புக்கு முன்பு இருந்த நிலையை கடந்த மாதம் ஆவின் மீண்டும் எட்டி உள்ளது.
- பால் விற்பனை அதிகரித்து உள்ள நிலையில் அதன் கொள்முதல் குறைந்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் அரசின் ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. தனியாரை விட குறைந்த விலையில் பால் கிடைப்பதால் பொதுமக்கள் இடையே ஆவின் பாலுக்கு எப்போதும் வரவேற்பு உள்ளது.
பால் பொருட்கள் மற்றும் பால் விற்பனையில் இதுவரையில் இருந்து வந்த பல்வேறு குளறுபடிகள் படிப்படியாக களையப்பட்டு வருகின்றன. பால் விநியோகத்தில் ஏற்பட்ட தாமதம் சரி செய்யப்பட்டது உள்ளிட்ட பல சீர்திருத்த நடவடிக்கைகளை தொடர்ந்து பால் விற்பனை 7 சதவீதம் அதிகரித்து உள்ளது.
சென்னை தவிர பிற மாவட்டங்களில் ஆவின் பால் விற்பனை கூடி உள்ளது. சென்னையில் மட்டும் 15 லட்சம் லிட்டர் பால் தினமும் வினியோகிக்கப்படுகிறது. பிற மாவட்டங்களில் இதுவரையில் 15 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது 16 லட்சம் லிட்டராக உயர்ந்து உள்ளது. சென்னையில் பால் வினியோகம் கொரோனா பாதிப்புக்கு முன்பு இருந்த நிலையை கடந்த மாதம் ஆவின் மீண்டும் எட்டி உள்ளது.
பால் விற்பனை அதிகரித்து உள்ள நிலையில் அதன் கொள்முதல் குறைந்துள்ளது. பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மூலம் விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்யும் அளவு 24 சதவீதம் குறைந்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் பால் கொள்முதல் 38.21 லட்சமாக இருந்தது. ஆனால் தற்போது 28.78 லட்சமாக குறைந்துள்ளது.
14.96 லட்சம் லிட்டராக இருந்த பால் விற்பனை 16.1 லட்சம் லிட்டராக உயர்ந்து உள்ளது.
மாவட்ட அளவில் உள்ள பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் பால் கொள்முதலுக்கான திட்டமிடலை முறையாக வகுக்காததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
ஆவின் நிர்வாகத்தில் உள்ள சில குளறுபடிகளை சரி செய்வதால் பால் கொள்முதல் அதிகரிக்கலாம். தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதலை அதிகரிக்கும் போது ஆவின் நிறுவனத்தால் செய்யமுடியாதா? பால் கொள்முதலை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பால் வினியோகர் நல சங்க தலைவர் பொன்னுசாமி தெரிவித்து உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்