search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாளை 9 மின்சார ரெயில்கள் ரத்து
    X

    நாளை 9 மின்சார ரெயில்கள் ரத்து

    • பயணிகளின் வசதிக்கேற்ப குறிப்பிட்ட தேதிகளில் 9 பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
    • திருவள்ளூர்- சென்னை சென்ட்ரல் புறநகர் இடையே சிறப்பு ரெயில்கள் காலை 11.10 மணிக்கும், பகல் 12.35 மணிக்கும் இயக்கப்படும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரக்கோணம் ரெயில்வே யார்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கும் காரணத்தால் நாளை (புதன்கிழமை) மற்றும் 30-ந்தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை சென்னை சென்ட்ரல் -அரக்கோணம் இடையே இயங்கும் 9 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. இதற்கு மாற்றாக பயணிகளின் வசதிக்கேற்ப குறிப்பிட்ட தேதிகளில் 9 பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    அதன்படி நாளை (புதன்கிழமை) மற்றும் 30-ந்தேதியில் சென்னை சென்ட்ரல் புறநகர்- கடம்பத்தூர் இடையே சிறப்பு ரெயில்கள் காலை 8.20 மணிக்கும், காலை 11 மணிக்கும் இயக்கப்படும். மறுமார்க்கமாக கடம்பத்தூர்-சென்னை சென்ட்ரல் புறநகர் இடையே சிறப்பு ரெயில்கள் காலை 10.25 மணிக்கும், காலை 11.35 மணிக்கும், பிற்பகல் 1.25 மணிக்கு இயக்கப்படும்.

    அதேபோல் சென்னை சென்ட்ரல் புறநகர்-திருவள்ளூர் இடையே சிறப்பு ரெயில்கள் காலை 9.10 மணிக்கும், காலை 10 மணிக்கும் இயக்கப்படும். மறுமார்க்கமாக திருவள்ளூர்- சென்னை சென்ட்ரல் புறநகர் இடையே சிறப்பு ரெயில்கள் காலை 11.10 மணிக்கும், பகல் 12.35 மணிக்கும் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×