என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
நாராயணசுவாமி கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானமாக 8 ஆயிரம் புரோட்டா
- இளைஞர்கள் உதவியுடன் 200 கிலோ மைதா மாவில் சுமார் 8 ஆயிரம் புரோட்டாக்கள், சைவ குருமா தயாரிக்கப்பட்டு அன்னதானமாக வழங்கப்பட்டது.
- கோவிலில் புரோட்டா அன்னதானமாக வழங்கப்பட்டது முக்கூடல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் முக்கூடலில் உள்ள பிரசித்திபெற்ற பழமையான கோவில்களில் ஒன்றான ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவிலில் ஆடி மாதம் 10 நாள் திருவிழா ஆண்டு தோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கோவிலில் உச்சிப்படிப்பு நடைபெற்ற நிலையில், 7-ந் திருநாளான நேற்று நாராயணர் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவில் புதிய முயற்சியாய், பக்தர்களுக்கு அன்னதானமாக புரோட்டா வழங்கப்பட்டது.
இதற்காக அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் உதவியுடன் 200 கிலோ மைதா மாவில் சுமார் 8 ஆயிரம் புரோட்டாக்கள், சைவ குருமா தயாரிக்கப்பட்டு அன்னதானமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து முக்கூடல் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
கோவிலில் புரோட்டா அன்னதானமாக வழங்கப்பட்டது முக்கூடல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்