search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மகளிர் உரிமைத் தொகை கேட்டு சென்னையில் 30 ஆயிரம் பேர் மீண்டும் விண்ணப்பம்
    X

    மகளிர் உரிமைத் தொகை கேட்டு சென்னையில் 30 ஆயிரம் பேர் மீண்டும் விண்ணப்பம்

    • மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு எந்த காரணத்திற்காக மனு நிராகரிக்கப்பட்டது என்ற தகவல் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்பட்டது.
    • உதவி மையங்களில் சென்று அதற்கான காரணத்தை தெரிந்து கொண்ட பெண்கள் மீண்டும் விண்ணப்பித்தனர்.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த 15-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது. சென்னையில் 9.55 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் 7 லட்சம் பெண்களுக்கு உரிமை தொகை கிடைத்தது. தகுதி உள்ளவர்களுக்கு உரிமைத் தொகை கிடைக்காமல் இருக்கக் கூடாது என்பதற்காக மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு எந்த காரணத்திற்காக மனு நிராகரிக்கப்பட்டது என்ற தகவல் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்பட்டது.

    உதவி மையங்களில் சென்று அதற்கான காரணத்தை தெரிந்து கொண்ட பெண்கள் மீண்டும் விண்ணப்பித்தனர். சென்னையில் 2 வாரத்தில் 30 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறியதாவது:-

    ஏற்கனவே 30 ஆயிரம் பெண்களின் மனுக்கள் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது மேலும் 30 ஆயிரம் பேர் மீண்டும் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் 60 ஆயிரம் பெண்களின் மனுக்கள் கள ஆய்வு செய்து தகுதியாக இருப்பின் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேல்முறையீடு செய்துள்ள இவர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி தகுதி இருப்பின் உடனே வழங்கப்படும் என்றார்.

    Next Story
    ×