என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மகளிர் உரிமைத் தொகை கேட்டு சென்னையில் 30 ஆயிரம் பேர் மீண்டும் விண்ணப்பம்
- மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு எந்த காரணத்திற்காக மனு நிராகரிக்கப்பட்டது என்ற தகவல் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்பட்டது.
- உதவி மையங்களில் சென்று அதற்கான காரணத்தை தெரிந்து கொண்ட பெண்கள் மீண்டும் விண்ணப்பித்தனர்.
சென்னை:
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த 15-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது. சென்னையில் 9.55 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் 7 லட்சம் பெண்களுக்கு உரிமை தொகை கிடைத்தது. தகுதி உள்ளவர்களுக்கு உரிமைத் தொகை கிடைக்காமல் இருக்கக் கூடாது என்பதற்காக மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு எந்த காரணத்திற்காக மனு நிராகரிக்கப்பட்டது என்ற தகவல் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்பட்டது.
உதவி மையங்களில் சென்று அதற்கான காரணத்தை தெரிந்து கொண்ட பெண்கள் மீண்டும் விண்ணப்பித்தனர். சென்னையில் 2 வாரத்தில் 30 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறியதாவது:-
ஏற்கனவே 30 ஆயிரம் பெண்களின் மனுக்கள் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது மேலும் 30 ஆயிரம் பேர் மீண்டும் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் 60 ஆயிரம் பெண்களின் மனுக்கள் கள ஆய்வு செய்து தகுதியாக இருப்பின் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேல்முறையீடு செய்துள்ள இவர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி தகுதி இருப்பின் உடனே வழங்கப்படும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்