search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை கடற்கரைக்கு வந்த 18 அடி நீள திமிங்கலம்
    X

    சென்னை கடற்கரைக்கு வந்த 18 அடி நீள திமிங்கலம்

    • திமிங்கலம் வெள்ளை நிற வயிற்றுடன் சாம்பல் நிறத்தில் இருந்தது.
    • திமிங்கலம் கடந்த 9, 10-ந் தேதிகளில் பார்த்த திமிங்கலங்களில் இருந்து வேறுப்பட்டது.

    சென்னை:

    சென்னை நீலாங்கரை கடற்கரையில் நேற்று திமிங்கலம் ஒன்று காணப்பட்டது. நீலாங்கரையை அடுத்த பனையூர் கடற்கரையில் இருந்து 50 மீட்டர் தொலைவில் வட்டமிட்டது. அந்த திமிங்கலம் வெள்ளை நிற வயிற்றுடன் சாம்பல் நிறத்தில் இருந்தது.

    இதுகுறித்து ட்ரி அறக்கட்டளை தலைவர் சுப்ரஜா தாரினி கூறியதாவது:-

    பனையூர் கடற்கரையில் திமிங்கலம் வந்தது பற்றி தகவல் கிடைத்ததும் அங்கு சென்றோம்.

    நீலாங்கரை கடற்கரையில் சில நாட்களுக்கு முன்பு 20 திமிங்கல சுறாக்கள் காணப்பட்ட நிலையில் 2-வது முறையாக நேற்று மற்றொரு திமிங்கலம் கடற்கரைக்கு வந்துள்ளது.

    அது 15 முதல் 18 அடி நீளம் கொண்டது. கரைக்கு மிக அருகில் வந்த அந்த திமிங்கலத்தை பார்த்த பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். உடனே பலர் திமிங்கலத்தை தங்களது செல்போன்களில் வீடியோ, புகைப்படம் எடுத்தனர்.

    திமிங்கலத்தின் முகம், வால், முதுகுத்துடுப்பு ஆகியவை தெரிந்தன. வெள்ளை வயிற்றுடன் சாம்பல் நிறத்தில் இருந்தது. இதன் தோலில் வெளிரி மஞ்சள் புள்ளிகள் மற்றும் கோடுகள் இருந்தன. இந்த திமிங்கலம் கடந்த 9, 10-ந் தேதிகளில் பார்த்த திமிங்கலங்களில் இருந்து வேறுப்பட்டது.

    இந்த ஆண்டு டால்பின்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதுடன் கரை ஒதுங்கும் விலங்குகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இதை நன்கு புரிந்து கொள்ள ஒரு அறிவியல் ஆய்வை நாம்மேற்கொள்ள வேண்டும். திமிங்கல சுறாவை பற்றி மேலும் அறிய பதிவு செய்யப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×