search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வணிகர் படுகொலையை கண்டித்து: தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையினர் ஆர்ப்பாட்டம்
    X

    வணிகர் படுகொலையை கண்டித்து: தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையினர் ஆர்ப்பாட்டம்

    • எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ராமச்சந்திரன், சூர்யபிரகாஷ் மற்றும் மாநில செயலாளர் வி.சி.கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை சார்பில் மாமூல் தராத வணிகர் வெட்டிக் கொல்லப்பட்டதை கண்டித்தும், வணிகர்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்ற கோரியும் பாதிக்கப்பட்ட வணிகருக்கு ரூ. 1 கோடி நிதியும், குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க கோரியும் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை மாநில தலைவர் அ.முத்துக்குமார் தலைமையில் இன்று எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் கே.சி.ராஜா, பொருளாளர் சி.பொன்னுசாமி, மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.அருண்குமார், மாநில, மாவட்ட நிர்வாகிகள் ப.ஜெயபாலன், கமாலுதின், பிரகாஷ், கணேசன், மகாலிங்கம், மெடிக்கல் கண்ணன், எ.பி. துரை, மணி ராஜ், மணிகண்டன், தேங்காய் கடை பாலமுருகன், சுரேஷ், சின்னதுரை, கருணாநிதி, சுப்புராஜ், கருப்பையா, பாலமுருகன், சுப்பிரமணியன், வேல்முருகன், சீனி பாண்டியன், பிரபு, சின்னமணி, ஆண்டனி பீட்டர், இசக்கி கோபால் ராஜா, விஜயராகவன், ராமச்சந்திரன், சூர்யபிரகாஷ் மற்றும் மாநில செயலாளர் வி.சி.கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×