search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி இன்று இரவு நிறைவடைகிறது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி இன்று இரவு நிறைவடைகிறது

    • சென்னையில் 100 சதவீத வாக்குப்பதிவை கொண்டு வர 18 வகையான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
    • 588 மிக உயர அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள மக்கள் இந்த முறை வாக்களிக்க தனி கவனம் செலுத்தப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் 100 சதவீத ஓட்டுப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் தினமும் பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

    வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், கல்லூரி மாணவர்கள், புதிய வாக்காளர்கள் கட்டாயம் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதா கிருஷ்ணன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் இன்று காலையில் திருவான்மியூர் கடற்கரையில் வாக்களிப்பதன் அவசியத்தினை வலியுறுத்தி 'பாரா செய்லிங்' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு கூடி இருந்த அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் மத்தியில் கமிஷனர் ராதாகிருஷ்ணன் பாரா கிளைட்டில் பறந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

    பின்னர் ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையில் 100 சதவீத வாக்குப்பதிவை கொண்டு வர 18 வகையான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. 40 சதவீதத்திற்கு குறைவாக வாக்குப்பதிவான 35 வாக்குச்சாவடிகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

    தீவுத்திடல் பகுதி, நிர்வாக கட்டிடங்கள், குடிசைப் பகுதிகளில் வாக்குப்பதிவு குறைவாக உள்ளது சரி செய்யப்படுகிறது. அதே போல ராணுவ பணியாளர்கள் மற்றும் தி.நகர், பாண்டிபஜார் பகுதியில் வசிக்கும் வியாபார பிரமுகர்கள் முறையாக வாக்களிக்கவில்லை. அதனையும் இந்த முறை சரி செய்ய விழிப்புணர்வு செய்யப்படுகிறது.

    மேலும் அரசு ஊழியர்கள் குடியிருப்பு பகுதியிலும் வாக்குப்பதிவு குறைவாக இருந்துள்ளது.

    மேலும் 588 மிக உயர அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள மக்கள் இந்த முறை வாக்களிக்க தனி கவனம் செலுத்தப்படுகிறது. வெயில் பாதிப்பு இருப்பதால் பந்தல், குடிநீர் வசதி போன்றவை செய்யப்படுகின்றன.

    இதுவரையில் தபால் ஓட்டு 1,175 பதிவாகி உள்ளன. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் நாளை (சனிக்கிழமை) வரை தபால் ஓட்டு போடலாம். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணி, 16 சட்டமன்ற தொகுதிகளிலும் பெரும்பாலான இடங்களில் முடிந்து விட்டது. சோழிங்கநல்லூர் தொகுதியில் 600 வாக்குச்சாவடிகள் உள்ளதால் அங்கு மட்டும் இன்று இரவு வரை சின்னம் பொருத்தும் பணி நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×