search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    87-வது பிறந்தநாள் கொண்டாட்டம்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவிப்பு

    • மணி மண்டபத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அரசு சார்பில் தாசில்தார் சுவாமிநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    திருச்செந்தூர்:

    பத்திரிகை, கல்வி, ஆன்மீகம், விளையாட்டு, பொதுசேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வியத்தகு சாதனைகள் படைத்து, முத்திரை பதித்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு பெருமை சேர்க்கும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், வீரபாண்டியன் பட்டினத்தில் தமிழக அரசு சார்பில் கடந்த 2020-ம் ஆண்டு ரூ.1 கோடியே 67 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் திறக்கப்பட்டது.

    மேலும் அவரது பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 24-ந் தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி திருச்செந்தூர் வீரபாண்டியன் பட்டினத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் இன்று அவரது பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.

    அரசு சார்பில் தாசில்தார் சுவாமிநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் நிலஅளவையர், பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    அதன்படி மணி மண்டபத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், ஒன்றிய செயலாளர் செங்குழிரமேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, பேரூராட்சி தலைவர் அஸ்ஸாப் கல்லாசி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சந்தையடியூர் ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாலை அணிவித்தனர்.

    தொழிலதிபர் தண்டுபத்து ஜெயராமன் சார்பில் அவரது மகன்கள் ரகுராம், சிவராமன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ் சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் சந்திரசேகர் தலைமையில் கவுன்சிலர் கிருஷ்ணவேனி, செண்பகராமன் உள்ளிடோர் மாலை அணிவித்தனர்.

    காயாமொழி கூட்டுறவு சங்கம் சார்பில் தலைவர் தங்கேச ஆதித்தன் தலைமையில் உபதலைவர் திருநாவுக்கரசு, உறுப்பினர் ராமலிங்கம், செயலாளர் அந்தோணி தினேஷ், பணியாளர்கள் சின்னத்துரை, நாராயணன், அசோக்குமார் ஆதித்தன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் சிவபால் தலைமையில் அப்பாத்துரை உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

    ஆதித்தனார் கல்லூரி ஆசிரியர், அலுவலர் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் பேராசிரியர் சேவியர்பெஸ்கி தலைமையில் பேராசிரியர், அலுவலர்கள் மாலை அணிவித்தனர்.

    ஆதித்தனார் கல்லூரி சுயநிதி பேராசிரியர்கள் அதன் தலைவர் பென்னெட் தலைமையில் மாலை அணிவித்தனர்.

    காயாமொழி ஊர் பொதுமக்கள் சார்பில், ஊர் தலைவர் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் தலைமையில் ராஜன் ஆதித்தன், வரதராஜன் ஆதித்தன், ஹெட்கெவாட் ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நெல்லை மாவட்ட டாக்டர் சிவந்திஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் தட்சணமாற நாடார் சங்க இயக்குனர் எஸ்.எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற இணைச்செயலாளர் செல்லத்துரை, உறுப்பினர்கள் சங்கரநாராயணன், கிருஷ்ணகுமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நாம் இந்தியர் கட்சி சார்பில் மாநில பொருளாளர் ஜெயகணேஷ் தலைமையில் வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பசாமி, தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர், ஒன்றிய செயலாளர் சரவணன், இளைஞரணி செயலாளர் உடையார், உறுப்பினர்கள் விக்னேஷ், வெங்கடேஷ், திருமணி செல்வம், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் வேல்சாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கம் சார்பில் அதன் மாநில தலைவர் டாக்டர் கென்னடி தலைமையில், மாவட்ட தலைவர் ராஜ்கமல், துணைத்தலைவர் உதயகுமார் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

    Next Story
    ×