search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெடி சத்தம் கேட்டு மயங்கி விழுந்த பள்ளி மாணவன் உயிரிழப்பு- போலீசார் விசாரணை
    X

    அஜய்குமார்

    வெடி சத்தம் கேட்டு மயங்கி விழுந்த பள்ளி மாணவன் உயிரிழப்பு- போலீசார் விசாரணை

    • அஜய்குமார் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
    • சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரில் திருச்செந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே தோப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவபெருமாள். இவருக்கு செல்வக்குமாரி என்ற மனைவியும், அஜய்குமார்(வயது 10) உள்பட 2 மகன்களும் உள்ளனர்.

    அஜய்குமார் அங்குள்ள ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால், அந்த பள்ளியில் கழிப்பிட பராமரிப்பு பணி நடைபெற்று வந்துள்ளது. நேற்று அந்த பகுதியில் அஜய்குமார் உள்பட 5 சிறுவர்கள் விளையாடி உள்ளனர்.

    அப்போது அங்கு திடீரென வெடிச்சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவன் அஜய்குமார் கீழே விழுந்தார். இதில் அவனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனே அவனை மீட்டு நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கிருந்து நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைக்காக சேர்த்த சிறிது நேரத்திலேயே அஜய்குமார் பரிதாபமாக இறந்தான். இதுதொடர்பாக சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரில் திருச்செந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×