என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கல்பாக்கத்தில் கடலில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவன் பலி
- மோகன் அணுபுரத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் நண்பர்களுடன் கலந்து கொண்டார்.
- ராட்சத அலை மோகனை கடலுக்குள் இழுத்து சென்றது.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரத்தசாரதி. இவரது மகன் மோகன் (வயது17). அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை மோகன் அணுபுரத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் நண்பர்களுடன் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் நண்பர்களுடன் சேர்ந்து கல்பாக்கம் சென்று அங்குள்ள கடலில் குளித்தார். அப்போது ராட்சத அலை மோகனை கடலுக்குள் இழுத்து சென்றது. நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உதவியுடன் கடலில் மூழ்கி மாயமான மோகனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அதே பகுதி கே.வி.பள்ளி அருகே மோகன் உடல் கரை ஒதுங்கியது. கல்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






