search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    சவுக்கு சங்கருக்கு 2 நாட்கள் போலீஸ் காவல்
    X

    சவுக்கு சங்கருக்கு 2 நாட்கள் போலீஸ் காவல்

    • சவுக்கு சங்கர் மற்றும் அவருடன் இருந்த பிரபு, ராஜரத்தினம் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • சவுக்கு சங்கரை 7 நாட்கள் காவலில் விசாரிக்க கோரி தேனி போலீசார் மனு இன்று மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது.

    மதுரை:

    சவுக்கு சங்கர் தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது, சவுக்கு சங்கரின் காரில் இருந்த அரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சவுக்கு சங்கர் மற்றும் அவருடன் இருந்த பிரபு, ராஜரத்தினம் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பிரபு, ராஜரத்தினம் ஆகிய 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை போலீசார் வழக்கு தொடர்பாக கைது செய்தனர்.

    தேனி மாவட்ட காவல் துறையால் பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் ஜாமின் கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

    இந்நிலையில் சவுக்கு சங்கரை 7 நாட்கள் காவலில் விசாரிக்க கோரி தேனி போலீசார் மனு இன்று மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது.

    மனுவை விசாரித்த மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிபதி செங்கமலச் செல்வன், சவுக்கு சங்கரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

    நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பெண் காவல் துறையினரின் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் அழைத்து செல்லப்பட்டார்.

    Next Story
    ×