search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சவுக்கு சங்கருக்கு மே 28ம் தேதி வரை நீதிமன்ற காவல்
    X

    சவுக்கு சங்கருக்கு மே 28ம் தேதி வரை நீதிமன்ற காவல்

    • சவுக்குசங்கர் மீது நேற்று முன்தினம் குண்டர் சட்டம் பாய்ந்தது.
    • சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதிமன்ற காவல் விதிப்பு.

    சவுக்கு சங்கர் மீது சென்னையில் அடுத்தடுத்து பல வழக்குகள் பதிவானதால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய்ரத்தோர் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் சவுக்குசங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

    இந்நிலையில், யூடியூபர் சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

    இன்று மாலை 5 மணி வரை சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இந்நிலையில், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கருக்கு மே 28ம் தேதி வரை நீதிமன்றம் காவலில் வைக்க கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஒரு நாள் போலீஸ் காவல் முடிந்து சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×