என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காவலாளியை தாக்கி ரூ.150 கோடி மதிப்புள்ள நில ஆவணம் திருட்டு: 4 பேர் கைது
    X

    காவலாளியை தாக்கி ரூ.150 கோடி மதிப்புள்ள நில ஆவணம் திருட்டு: 4 பேர் கைது

    • ரூ.150 கோடி மதிப்புள்ள நில ஆவணங்களை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.
    • போலீசார் காவலில் எடுத்து விசாரித்தபோது ரியல் எஸ்டேட் தொழில் போட்டியில் நில ஆவணங்கள் திருட்டு நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியை சேர்ந்தவர் தண்டபாணி. இவருக்கு தேவநேரியில் ரியல் எஸ்டேட் அலுவலகம் உள்ளது. இங்கிருந்த காவலாளியை தாக்கி மர்மநபர்கள் ரூ.150 கோடி மதிப்புள்ள நில ஆவணங்களை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.

    இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழைய வண்ணாரப்பேட்டை சேரன், மீஞ்சூர் வசந்தபிரியன், நீலாங்கரை கார்த்திகேயன், வெட்டு வாங்கேணி செந்தில் ஆகியோரை கைது செய்தனர். ஏற்கனவே மாமல்லபுரம் முகமது பாருக் அலி, சம்பத்குமார் ஆகிய இருவரும் திண்டிவனம் கோர்ட்டில் சரண் அடைந்து இருந்தனர். அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தபோது ரியல் எஸ்டேட் தொழில் போட்டியில் இந்த நில ஆவணங்கள் திருட்டு நடந்து இருப்பது தெரியவந்து உள்ளது.

    இதுதொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×