search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆம்பூர் அருகே கோவில் உண்டியலை தூக்கி சென்ற கொள்ளையர்கள்
    X

    ஆம்பூர் அருகே கோவில் உண்டியலை தூக்கி சென்ற கொள்ளையர்கள்

    • கோவில் வளாகத்தில் நாகாத்தம்மனுக்கு தனி சன்னதி கட்டப்பட்டுள்ளது.
    • கோவில் வளாகத்தில் இருந்த 2 உண்டியல்கள் திருடு போனது தெரியவந்தது.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த தேவலாபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திருப்பதி கெங்கையம்மன் கோவில் உள்ளது.

    கோவில் வளாகத்தில் நாகாத்தம்மனுக்கு தனி சன்னதி கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு கோவிலுக்குள் புகுந்த 2 கொள்ளையர்கள் கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலை தூக்கிச் சென்றனர். இன்று காலை வழக்கம்போல் கோவிலுக்கு வந்த பூசாரி கோவில் முன்பக்க கேட் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது கோவில் வளாகத்தில் இருந்த 2 உண்டியல்கள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து பூசாரி கோவில் தர்மகத்தா வெங்கடேசனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் உமராபாத் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். 2 வாலிபர்கள் கோவிலுக்குள் வந்து உண்டியல்களை தூக்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இதுகுறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து சி சி டிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×