search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரிசி விலை கிலோவுக்கு ரூ.17 வரை உயர்வு
    X

    அரிசி விலை கிலோவுக்கு ரூ.17 வரை உயர்வு

    • சென்னையில் ஏற்கெனவே மொத்த விலையில் கிலோ ரூ.60-க்கு விற்ற புழுங்கல் அரிசி தற்போது ரூ.68 ஆக உயர்ந்துள்ளது.
    • பிராண்டட் அரிசி கிலோவுக்கு ரூ.10 வரை அதிகரித்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி பருவங்களில் 15 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு குறுவை பருவத்தின்போது போதிய மழை பெய்யாததால் தண்ணீர் இல்லாத நிலையில் அக்டோபர் மாதமே மேட்டூர் அணை மூடப்பட்டது. இதனால் இருந்த தண்ணீரை வைத்து குறுவை அறுவடையை விவசாயிகள் முடித்தனர்.

    அதே நேரத்தில் சம்பா சாகுபடிக்கு மழை கைகொடுக்கும் என நம்பி விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்டனர். ஆனால் போதிய மழை பெய்யவில்லை. மேலும், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் ஓரிரு நாட்கள் பெய்த மழையால் வயலில் தண்ணீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் போதிய விளைச்சல் இல்லாததால் கர்நாடகா, ஆந்திரா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு அரிசி சப்ளை செய்யப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாகவே அரிசி விலை அதிகரித்து வருகிறது.

    சென்னையில் ஏற்கெனவே மொத்த விலையில் கிலோ ரூ.60-க்கு விற்ற புழுங்கல் அரிசி தற்போது ரூ.68 ஆக உயர்ந்துள்ளது. ரூ.60-க்கு விற்ற வேகவைத்த அரிசி ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. பாஸ்மதி அரிசி ரூ.120-க்கு விற்கப்படுகிறது. பழுப்பு அரிசி ரூ.39-க்கு விற்கப்படுகிறது. ரூ.37-க்கு விற்ற இட்லி அரிசி ரூ.40 ஆக உயர்ந்துள்ளது. பிராண்டட் அரிசி கிலோவு க்கு ரூ.10 வரை அதிகரித்துள்ளது.

    அதே நேரத்தில் சென்னையில் சில்லரை விற்பனையில் அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.17 வரை உயர்ந்துள்ளது. அரிசி விலை உயர்ந்துள்ள நிலையில் சென்னையில் ஓட்டல்களில் இட்லி, தோசை உள்ளிட்ட உணவுகளின் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×