என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ராஜபாளையம் அருகே வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது: தண்ணீரில் மூழ்கி மூதாட்டி உயிரிழப்பு
- கண்மாயிலிருந்து வெளியேறும் நீர் செல்ல வழி இல்லாமல் ஓடையில் நிரம்பி வழிவதால் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்தது.
- வாகைக்குளம்பட்டி பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வேலாயுதபுரம், சத்திரப்பட்டி, வாகைகுளம் பகுதிகளில் உள்ள கண்மாய்களில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று இரண்டாவது நாளாக அடை மழை பெய்து வரும் நிலையில் கண்மாயிலிருந்து வெளியேறும் நீர் செல்ல வழி இல்லாமல் ஓடையில் நிரம்பி வழிவதால் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்தது.
வாகைக்குளம்பட்டி பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சங்கிலியூர் என்ற 80 வயது மூதாட்டி வீட்டில் திடீரென மழை நீர் வீட்டுக்குள் புகுந்ததால் தண்ணீருக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் அதே பகுதியில் 2 வீடுகளும் இடிந்து சேதமடைந்தது. சேதமடைந்த வீடுகளுக்கும், மழைநீர் புகுந்து பாதிக்கப்பட்ட வீடுகளுக்கும் தமிழக அரசு நிவாரணம் வழங்கவேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்