என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை
    X

    தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை

    • நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி, களக்காடு உள்ளிட்ட பகுதியில் மழை பெய்தது.
    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர்வரத்து குறைந்துவிட்டது.

    தூத்துக்குடி:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது.

    இன்று காலை வரை அதிகபட்சமாக விளாத்திகுளத்தில் 23 மில்லிமீட்டரும், கோவில்பட்டியில் 21 மில்லிமீட்டரும், கயத்தாறில் 19 மில்லிமீட்டரும், கழுகுமலையில் 12 மில்லிமீட்டரும் மழை பதிவானது.

    இதேபோல் தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், மணியாச்சி, திருச்செந்தூர், காயல்பட்டினம், ஸ்ரீவைகுண்டம், எட்டயபுரம், காடல்குடி, வைப்பாறு, சூரன்குடி, வேடநத்தம் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் தென்காசி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், சங்கரன்கோவில், சிவகிரி பகுதியிலும், நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி, களக்காடு உள்ளிட்ட பகுதியிலும் மழை பெய்தது.

    எனினும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர்வரத்து குறைந்துவிட்டது. மெயினருவி, ஐந்தருவியில் குறைந்த அளவே தண்ணீர் விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் சிறிதளவே காணப்பட்டது.

    Next Story
    ×