என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பெண் பிணத்தை புதைக்க பள்ளம் தோண்டியதற்கு எதிர்ப்பு- தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார்
    X

    பெண் பிணத்தை புதைக்க பள்ளம் தோண்டியதற்கு எதிர்ப்பு- தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார்

    • இருதரப்பினரை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர்.
    • சமரசத்தை பொதுமக்கள் ஏற்க மறுத்ததால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் பி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு சலவை தொழிலாளி. இவரது மனைவி சின்னகுழந்தை. சில நாட்கள் முன்பு நோய் வாய்பட்டு இன்று அதிகாலை சின்னகுழந்தை இறந்தார்.

    அவரது உடலை அடக்கம் செய்ய சேவூர் ஊராட்சிக்குபட்ட வேலூர்-ஆரணி சாலையில் நெடுஞ்சாலை ஓரத்தில் புறம்போக்கு இடத்தில் பள்ளம் தோண்டியதாக கூறப்படுகிறது.

    இதற்கு சேவூர் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அங்கு இருதரப்பினரை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர். இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றியது.

    ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருதரப்பினரையும் சமரசம் செய்ய முயன்றனர்.

    ஆனால் சமரசத்தை பொதுமக்கள் ஏற்க மறுத்தனர். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×