search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்துக்கு சொத்து வரி விதிப்பதா? மதுரை ஐகோர்ட்டு கண்டனம்
    X

    ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்துக்கு சொத்து வரி விதிப்பதா? மதுரை ஐகோர்ட்டு கண்டனம்

    • மனுதாரரிடம் இருந்து குறிப்பிட்ட கால இடை வெளிகளில் வீட்டு வரி வசூலிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது.
    • அரசு நிலங்களில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு அரசு அதிகாரிகள் சட்டத்தை பொருத்திப் பார்க்காமல் விருப்பம் போல் வரியை வசூலிக்கின்றனர்.

    மதுரை:

    தேனியைச் சேர்ந்தவர் சையது அபுதாஹிர். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சட்டரீதியாக தனக்கு சொந்தமான 98 சதுர அடி நிலத்தை ஆக்கிரமிப்பு எனக்கூறி அதிகாரிகள் அகற்ற முயல்வதாகவும், ஆகவே ஆக்கிரமிப்பு எனக்கூறி அகற்ற நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் உத்தரவிடக் கோரி இருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தேனி மாவட்ட கலெக்டர், சின்னமனூர் நகராட்சி ஆணையர் தரப்பில் ஏற்கனவே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    மனுதாரர் சமர்ப்பித்த ஆவணங்களின் அடிப்படையில், மனுதாரரிடம் இருந்து குறிப்பிட்ட கால இடை வெளிகளில் வீட்டு வரி வசூலிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. தற்போது தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் சின்னமனூர் நகராட்சி ஆணையர் தரப்பில் அவை ரத்து செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அரசு நிலங்களில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு அரசு அதிகாரிகள் சட்டத்தை பொருத்திப் பார்க்காமல் விருப்பம் போல் வரியை வசூலிக்கின்றனர். ஒருவர் ஆக்கிரமிப்பாளர் என தெரிந்த பின்பு அவருக்கு சொத்து வரியை விதிக்கக்கூடாது.

    வருவாய் ஆவணங்களின் அடிப்படையில் சட்ட அடிப்படையிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்து அரசு நிலங்களில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு நகராட்சி நிர்வாகம் தரப்பில் எதன் அடிப்படையில் சொத்து வரி மதிப்பீடு செய்யப்படுகிறது? என நகராட்சி நிர்வாக துறையின் முதன்மைச் செயலர் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூன் 5-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    Next Story
    ×