search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நடுரோட்டில் தீ பற்றி எரிந்த தனியார் பள்ளி பஸ்- அதிர்ஷடவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்
    X

    தனியார் பள்ளி பஸ் தீப்பற்றி எரிந்த காட்சி.

    நடுரோட்டில் தீ பற்றி எரிந்த தனியார் பள்ளி பஸ்- அதிர்ஷடவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்

    • பள்ளிக்கு சொந்தமான பஸ்சில் இன்று காலை சேர்ந்தமங்கலம் பகுதியில் இருந்து மாணவர்கள் 4 பேரை ஏற்றி சென்றனர்.
    • சுமார் 30 நிமிடம் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. பஸ் முழுவதும் எரிந்தது.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஜோதி நகர் பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

    இந்த பள்ளிக்கு சொந்தமான பஸ்சில் இன்று காலை சேர்ந்தமங்கலம் பகுதியில் இருந்து மாணவர்கள் 4 பேரை ஏற்றி சென்றனர். சேர்ந்தமங்கலம் ரெயில்வே கேட் அருகில் வந்தபோது பஸ்சின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    இதை கவனித்த பஸ் டிரைவர் சீனிவாசன் (வயது 31) உடனடியாக பஸ்சை நிறுத்தினார்.

    அதிலிருந்த 4 மாணவர்களை கீழே இறக்கினார். அவரும் உயிர் தப்பினார். அந்த நேரத்தில் பஸ் முழுவதும் தீ பற்றி எரிந்தது.

    இதுகுறித்து அரக்கோணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சுமார் 30 நிமிடம் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. பஸ் முழுவதும் எரிந்தது.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

    தீ விபத்துக்கான காரணம் குறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    Next Story
    ×