search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருப்பூர் மாவட்டத்தில் மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது
    X

    திருப்பூர் மாவட்டத்தில் மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது

    • திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 2 ஆயிரத்து 529 பேர் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களாக உள்ளனர்.
    • திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 2 ஆயிரத்து 288 பேர் இருக்கிறார்கள்.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 12டி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, தபால் ஓட்டு அளிக்க விருப்பத்தை தெரிவித்தார்கள்.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 2 ஆயிரத்து 529 பேர் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களாக உள்ளனர். 781 பேர் மாற்றுத்திறனாளிகள். அவர்கள் தபால் வாக்களிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தபால் வாக்கு பதிவு செய்ய தனியாக 110 குழு அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் இன்று வீடு வீடாக சென்று தபால் வாக்குகளை பதிவு செய்ய தொடங்கி உள்ளனர். வேட்பாளர்களின் முகவரும் இந்த குழுவினருடன் சென்ற னர். இந்த காட்சிகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 2 ஆயிரத்து 288 பேர் இருக்கிறார்கள். 600 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு தபால் வாக்குப்பதிவு செய்ய 78 குழுவினர் வீடு வீடாக செல்கின்றனர். இந்த குழு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தபால் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். நாளையும் தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட உள்ளது.

    Next Story
    ×