என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் தொடங்கியது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான 'டோக்கன்' வினியோகம் தொடங்கியது

    • பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் இலங்கை அகதி முகாம்களில் இருக்கும் தமிழர்கள் ஆகிய 2.19 கோடி பேருக்கு வழங்கப்படும்.
    • டோக்கனில் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் ஆகியவை இடம் பெற்று இருக்கிறது.

    சென்னை:

    பொங்கல் திருநாளையொட்டி பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு அறிவித்தது. ரூ.1000 ரொக்கப்பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த பரிசு தொகுப்பு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை அகதி முகாம்களில் இருக்கும் தமிழர்கள் ஆகிய 2.19 கோடி பேருக்கு வழங்கப்படும்.

    வருகிற 9-ந் தேதி (திங்கள்) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கி தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே தமிழகத்தில் உள்ள 33 ஆயிரம் ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை உணவு பொருள் வழங்கல் துறையினர் செய்து வருகிறார்கள்.

    ரேஷன் கடையில் குடும்பத்தலைவர் அல்லது குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் கைவிரல் ரேகையை பதிவு செய்து தான் அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகிறார்கள். இப்போது பொங்கல் பரிசு தொகுப்பை பெறவும் கைரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    அதே நேரம் ரேஷன் கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே டோக்கன் வழங்கப்படுகிறது. இந்த பணி இன்று தொடங்கியது. ஊழியர்கள் வீடுவீடாக சென்று டோக்கன் வழங்கி கொண்டிருக்கிறார்கள்.

    அந்த டோக்கனில் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் ஆகியவை இடம் பெற்று இருக்கிறது.

    ஒரு நாளைக்கு 200 டோக்கன் வீதம் வழங்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் சிரமம் இல்லாமல் தங்கள் பரிசு தொகுப்புகளை வாங்கி கொள்ளலாம்.

    பொங்கல் பரிசு தொகுப்பில் ஏதேனும் குறைகள் இருந்தால் புகார் செய்யலாம். அதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த எண்கள் வருமாறு:-

    1967 மற்றும் 1800-425-5901.

    Next Story
    ×