search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நடுரோட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மாணவிகள்- போலீசார் எச்சரிக்கை
    X

    நடுரோட்டில் 'கேக்' வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மாணவிகள்- போலீசார் எச்சரிக்கை

    • உற்சாக மிகுதியில் கேக்குகளை ஒருவர் மீது ஒருவர் வீசியும், நுரைவரும் ஸ்பிரேயை மற்றவர்கள் மீது அடித்தும் கூச்சலிட்டனர்.
    • மாணவிகளின் இந்த செயல் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ்களில் ஆபத்தை உணராமல் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால் மாணவ-மாணவிகள் பள்ளி செல்லும் காலை மற்றும் மாலை நேரத்திலும் கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் திருவள்ளூரில் நடுரோட்டில் மாணவிகள் 'கேக்' வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் காமரா ஜர் சிலை அருகே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் திரண்டு இருந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஒரு கடையில் கேக் ஒன்றை வாங்கினர். பின்னர் அவர்கள் தங்களது தோழி ஒருவரது பிறந்தநாளை நடுரோட்டில் கேக் வெட்டி கொண்டாடினர்.

    அப்போது உற்சாக மிகுதியில் கேக்குகளை ஒருவர் மீது ஒருவர் வீசியும், நுரைவரும் ஸ்பிரேயை மற்றவர்கள் மீது அடித்தும் கூச்சலிட்டனர். அந்த நுரை சாலையில் சென்ற பொதுமக்கள் மீது விழுந்தது. இதனை பொதுமக்கள் கண்டித்தும் மாணவிகள் கண்டுகொள்ளாமல் கத்தியபடி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளின் இந்த செயல் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாணவ-மாணவிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் அந்த மாணவிகளின் விபரத்தை சேகரித்து அவர்களுக்கு அறிவுரை கூற போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    Next Story
    ×