search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெரியார் 144-வது பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் நாளை மரியாதை செலுத்துகிறார்
    X

    முக ஸ்டாலின்

    பெரியார் 144-வது பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் நாளை மரியாதை செலுத்துகிறார்

    • தமிழ்நாடு அரசின் சார்பில் தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.
    • சிம்சன் அருகில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து, அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.

    சென்னை:

    தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    மேலும், அவரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாகக் கடந்த ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு, அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழியும் எடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு அரசின் சார்பில் தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் சார்பில், தந்தை பெரியார் 144-வது பிறந்தநாளினை முன்னிட்டு, 17-ந் தேதி காலை 9 மணியளவில், அண்ணா சாலை, சிம்சன் அருகில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து, அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டு உள்ள அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.

    Next Story
    ×