search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உல்லாசத்துக்கு மறுத்ததால் ஆத்திரம்- கள்ளக்காதலியை கொன்ற முதியவர் கைது
    X

    கைதான இருளப்பன்

    உல்லாசத்துக்கு மறுத்ததால் ஆத்திரம்- கள்ளக்காதலியை கொன்ற முதியவர் கைது

    • போலீசார் செல்வியின் உடலை கைப்பற்றி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • கடந்த சில மாதங்களாக எனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு காசநோய் தொற்று ஏற்பட்டது.

    தேனி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி வாசுகி அம்மையார் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி செல்வி (வயது 45). இவர் தினந்தோறும் தான் வளர்க்கும் ஆடுகளுக்கு புல் அறுக்க செல்வது வழக்கம். நேற்று காலையில் புல் அறுக்க சென்றவர் மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். வடப்புதுப்பட்டி அழகர் கோவில் செல்லும் சாலையில் உள்ள வாழைத் தோட்டத்தில் செல்வி பிணமாக கிடந்தார். இதுகுறித்து அல்லி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் செல்வியின் உடலை கைப்பற்றி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருந்ததுடன் உடலில் வெட்டுக்காயங்களும் இருந்ததால் நகைக்காக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்தனர்.

    போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் சருத்துப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி இருளப்பன் (62) என்பவரிடம் அடிக்கடி பேசி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பதுங்கி இருந்த அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    கள்ளக்காதல் பிரச்சினையில் செல்வி கொலை செய்யப்பட்டது உறுதியானது. இது குறித்து இருளப்பன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும் செல்விக்கும் கடந்த சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக எனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு காசநோய் தொற்று ஏற்பட்டது. இதனால் என்னுடன் பேசுவதை அவர் தவிர்த்து வந்தார். நேற்று புல் அறுக்க சென்றபோது அவரிடம் நைசாக பேசி உல்லாசத்துக்கு வருமாறு அழைத்தேன். பின்னர் வாழைத்தோப்புக்கு அழைத்துச் சென்றபோது அவர் வர மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்து கட்டையால் அடித்து கொலை செய்தேன். வெளியூர் தப்பி செல்ல நினைத்து அவர் அணிந்திருந்த நகைகளை திருடிக் கொண்டு தப்ப முயன்றபோது போலீசார் என்னை பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் இருளப்பனை கைது செய்தனர்.

    Next Story
    ×