search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குறும்பட இயக்குனர் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை
    X

    குறும்பட இயக்குனர் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை

    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் மாவோயிஸ்ட்டு வழக்கு ஒன்று தொடர்பாக சோதனை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட முகில் சந்திரா கொரட்டூர் பகுதியில் வசித்து வருகிறார்.

    சென்னை:

    சென்னை கொரட்டூர் ரெட்டேரி கேனல் ரோடு பகுதியில் வசித்து வருபவர் முகில் சந்திரா. குறும்பட இயக்குனரான இவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    ஐதராபாத்தில் இருந்து வந்திருந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் மாவோயிஸ்ட்டு வழக்கு ஒன்று தொடர்பாக சோதனை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர் கொரட்டூர் பகுதியில் வசித்து வருகிறார். இதையடுத்து அங்கு பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு தொடர்பாகவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த சோதனையின்போது முகில் சந்திரா பயன்படுத்திய செல்போன் மற்றும் ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சோதனை முடிவில்தான் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது பற்றி விவரங்கள் வெளிவரும் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×